மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் ஒன்றியம், இ.புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் சுகுமார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரத்னம்(எ) செந்தில்குமார் என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், சுகுமாரின் வீட்டை ரத்னம் உள்பட சிலர் தாக்கினர். வீடு முன் நிறுத்தியிருந்த பைக்கை அடித்து நொறுக்கினர். இதுபற்றி மல்லசமுத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ரத்னத்தை கைது செய்தனர். மேலும், தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனர்.
மல்லசமுத்திரம் அருகே லாரி உரிமையாளர் வீட்டை தாக்கியவர் கைது
previous post