திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், 17வயது சிறுமியை கடத்திய வெல்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். திருச்செங்கோடு எஸ்என்டி பகுதியைச் சேர்ந்த 17வயது சிறுமிக்கும், ஆவத்திபாளையத்தைச் சேர்ந்த வெல்டர் சந்ேதாஷ்(24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் கடந்த 18ம் தேதி, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமியை கடத்திச் சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில், திருச்செங்கோடு நகர போலீசார் வழக்குப்பதிந்து சிறுமியை தேடி வந்தனர். இதில், வையப்பமலை பகுதியில் சிறுமியை தங்க வைத்திருந்தது தெரிய வந்தது. உடனே, சிறுமியை மீட்ட போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் சந்தோஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.