குமாரபாளையம், ஆக.17: குமாரபாளையம் அரசு பள்ளியில் படித்து, மருத்துவ கல்லூரியில் படிக்க தேர்வான மாணவிகளுக்கு, பாராட்டு விழா நடைபெற்றது. குமாரபாளையம் அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் ஜனனி, மோனிகாஸ்ரீ, சாருலதா, கவினயா உள்ளிட்ட 6 மாணவிகளுக்கு, தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க சீட் கிடைத்துள்ளது. இந்த மாணவிகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. நகரமன்ற தலைவர் விஜயகண்ணன், உதவி தலைமை ஆசிரியர் தமிழி, நகர மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ், கனகலட்சுமி, இனியாராஜ், பரிமளம் கந்தசாமி, சுமதி சந்திரன், வேல்முருகன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மருத்துவம் பயிலும் மாணவிகளை பாராட்டி பரிசளிக்கப்பட்டது.
மருத்துவம் படிக்க தேர்வான மாணவிகளுக்கு பாராட்டு
previous post