மதுரை, ஏப். 30: மதுரை மருத்துவக் கல்லூரியைச் சுற்றிலும் 2 கி.மீ தொலைவிற்கு டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை நாடாளுமன்ற தொகுதிக்குரிய தேர்தல் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள், அதற்கான எண்ணிக்கை நடைபெற உள்ள மதுரை மருத்துவக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
எனவே, மதுரை மருத்துவக் கல்லூரியைச் சுற்றி 2 கி.மீ. சுற்றளவுக்குள், நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.