கும்பகோணம், மார்ச் 21: கும்பகோணம் அருகே பாபநாசம் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கும் பாதுகாப்பு அறையை கும்பகோணம் ஆர்டிஓ பூர்ணிமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி, பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 301 வாக்கு சாவடி மையங்கள் 167 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 26 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தற்போது வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படுகின்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட உள்ள பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அறையை கும்பகோணம் ஆர்டிஓ பூர்ணிமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பாபநாசம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலருமான முத்துகிருஷ்ணன், பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.