கும்பகோணம், மார்ச் 21: கும்பகோணம் அருகே பாபநாசம் வட்டாரத்தில் வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டாரத்தில் அரையபுரம் கிராமத்தில் உள்ள சங்கர் கௌரி பசுமை குடிலில் ஆர்.வி.எஸ் வேளாண்மை கல்லூரி மாணவிகள் களம் செயல் விளக்கம் நடத்தினர். அதில் ஊர் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த களம் செயல் விளக்கத்தில் மாணவிகள் உரமாகுதல், நீல பச்சை ஆல்கா, காண்டாமிருக வண்டு, பொறி விஷ தூண்டில் சிலேஜ் தயாரிப்பு, உழவன் செயலி போன்றவற்றின் செய்முறையை செய்து காட்டினர். பயிற்சி முகாமில் வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள், கிராமத்தினர் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.