மன்னார்குடி, ஏப். 3: தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மன்னார்குடி சட்டமன்ற தொகுதி யில் வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், மன்னார்குடிஅடுத்த பரவாக்கோட்டை பெட்ரோல் பங்க் அரு கே வேளாண் அலுவலர் ராஜகுரு, எஸ்எஸ்ஐ சோமசுந்தரம், காவலர்வினோத் ஆகியோர் அடங்கிய பறக்கும் படையினர் நேற்று மாலை வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி பைக்கில் வந்த பட்டுக்கோட்டை சொக்கநாத புரம் பகுதியை சேர்ந்தமணிகண்டன் (24) என்ப வர் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ 1,02, 750 ரொக்க பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் நடத்தும் உதவி அலு வலரின் நேர்முக உதவியாளர் ராம் வசம் பறக்கும் படையினர் ஒப்படை த்தனர்.