போச்சம்பள்ளி: மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மாவட்ட மற்றும் மாநில அளவிலான பல்வேறு வகையான கலைத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். இதையறிந்த பள்ளி நிர்வாகம், அம்மாணவர்களை பாராட்டும் வகையில், அனைத்து மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர் வாசுதேவன் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார். இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மத்தூர் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி
previous post