திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூரில் மண்எண்ணெய் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இதில் காசாளராக வெங்கடேஷ் பணியாற்றி வருகிறார். இந்த மண்எண்ணெய் கிடங்கிலிருந்து மாதந்தோறும் 800 வீதம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கும் வழங்கல் துறைக்கு லஞ்சம் கேட்டு கட்டாயப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், கடந்த 3 மாதங்களுக்கும் சேர்த்து ரூ.2,400 ஐ வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணவேணியிடம் கொடுக்குமாறு குடிமைப்பொருள் தனி வருவாய் அலுவலர் கோபிநாத் மற்றும் இடைத்தரகர் ஜெகன் ஆகியோர் வெங்கடேஷை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து வெங்கடேஷ் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். நேற்று லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அங்கு மறைந்திருந்தனர். போலீசார் அறிவுரைப்படி வெங்கடேஷ் 2,400 பணத்தை கோபிநாத்திடம் கொடுத்துள்ளார். அதற்கு அவர் கிருஷ்ணவேணியிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து கிருஷ்ணவேணியிடம் பணத்தை வெங்கடேஷ் கொடுத்தார். அதை கிருஷ்ணவேணி பெற்றுக்கொண்டு இடைத்தரகர் ஜெகனிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த போலீசார் கிருஷ்ணவேணி, கோபிநாத், ஜெகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 2,400 பணத்தை பறிமுதல் செய்தனர்….