மதுரை: வைகை ஆற்று கரையோரம் மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்க தடை கோரிய வழக்கை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்தது. மானாமதுரை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான போதிய ஆவணங்கள் இல்லாததால் தள்ளுபடி செய்து ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர். …