Saturday, May 11, 2024
Home » மஞ்சு வாரியரை பற்றி அவதூறு: சினிமா டைரக்டர் கைது

மஞ்சு வாரியரை பற்றி அவதூறு: சினிமா டைரக்டர் கைது

by kannappan

திருவனந்தபுரம்: சமூக வலைதளங்களில் தனக்கு எதிராக அவதூறு பரப்புவதாக கூறி பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் அளித்த புகாரின் பேரில் மலையாள டைரக்டர் கைது செய்யப்பட்டார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். இவர் பத்ரம், கன்மதம், ஒடியன், லளிதம் சுந்தரம் உள்பட ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். இவர் மலையாள முன்னணி நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி ஆவார். இந்த நிலையில் மஞ்சு வாரியர் நேற்று கொச்சி போலீசில் ஒரு புகார் கொடுத்தார். கடந்த சில மாதங்களாக சமூகவலைதளங்களில் இயக்குனர் சனல்குமார் சசிதரன் தன் மீது அவதூறு கருத்துக்களை பரப்புவதாகவும், எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தப் புகாரில் அவர் குறிப்பிட்டிருந்தார். சனல்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பிறகு நேற்று பகல் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்….

You may also like

Leave a Comment

six + 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi