சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் கடந்த 7 மாதங்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து உயர் ரத்த அழுத்த நோய் சிகிச்சைக்காக முதன்முறையாக 20,23,519 பேரும், தொடர் சேவைகள் 21,00,709 பேர், நீரிழிவு நோய் சிகிச்சை முதன்முறையாக 13,87,832 பேர், தொடர் சேவையாக 14,87,444 பேர், உயர் ரத்த அழுத்த மற்றும் நீரிழிவு நோய் சிகிச்சை முதன்முறையாக 10,21,924 பேர், தொடர் சிகிச்சை 1,59,848 பேர், நோய் ஆதரவு சிகிச்சை முதன்முறையாக 1,78,005 பேர், தொடர் சிகிச்சை 1,38,269 பேர், இயன்முறை சிகிச்சை முதன் முறையாக 3,43,575 பேர், தொடர் சேவையாக 3,71,938 பேர், சிறு நீரக நோய்க்கு சுய டயாலிசிஸ் செய்து கொள்வதற்கு தேவையான பைகள் பெற்றவர்கள் முதன்முறையாக 1,259 பேர், தொடர் சேவையாக 1,244 பேர் என முதன்முறையாக 49,97,404 பேரும், தொடர் சேவையாக 52,22,664 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று தமிழக மருத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்….