புனே: புனேயில் மகாராஷ்டிரா பாஜ அமைச்சர் மீது கருப்பு மை வீசியவர் பிடிபட்டார். மகாராஷ்டிரா மாநில அமைச்சராக இருப்பவர் சந்திரகாந்த் பாட்டீல். பாஜவின் மூத்த தலைவரான இவர் அம்பேத்கர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி மகாத்மா ஜோதிபா புலே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்,புனே அருகே உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாடில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும் கட்டிடத்தை விட்டு அவர் வெளியே வரும்போது மர்ம நபர் ஒருவர் சந்திரகாந்த் மீது கருப்பு மை வீசினார். இதையடுத்து அமைச்சரின் பாதுகாவலர்கள் அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….