கிருஷ்ணகிரி, ஏப்.3: தேன்கனிக்கோட்டை கொத்தூர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி இந்துமதி(24). இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், கடந்த 3 மாதத்திற்கு முன்பு வீட்டில் இருந்து மகனுடன் வெளியேறிய இந்துமதி வேப்பனஹள்ளி தேவர் குந்தாணி பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனிடையே அங்கிருந்து கடந்த 24ம் தேதி திடீரென மகனடன் இந்துமதி மாயமானார். இதுபற்றி அவரது தந்தை பால்ராஜ் வேப்பனஹள்ளி போலீசில் புகாரளித்தார். அதில், கொத்தூர் பகுதியைச் சேர்ந்த மாதேவன்(30) என்பவர் இந்துமதியை அவரது மகனுடன் கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மகனுடன் இளம்பெண் கடத்தல் ; வாலிபர் மீது புகார்
previous post