சென்னை: பொது சொத்தை சேதப்படுத்தியதாக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2005 உள்ளாட்சி இடைத்தேர்தலில் கே.கே.நகர் வாக்குச்சாவடிக்கு சென்று பொது சொத்தை சேதப்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுகவினர் மனு தாக்கல் செய்திருந்தனர். …