சீர்காழி: சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கோலூன்றி போட்டியில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவிலான கோலூன்றி போட்டி சீர்காழி விவேகானந்தா பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினார். சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் U/17, U/19 பிரிவில் 8 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, இதில் 7 மாணவ, மாணவிகள் முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பெற்று சாதனை புரிந்தனர். இந்த மாணவர்கள் சென்னையில் நடைபெற இருக்கின்ற மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
பொதுமக்கள் கோரிக்கை கோலூன்றி போட்டியில் சீர்காழி மாணவர்கள் அசத்தல்
previous post