அம்பை, செப்.15: தெற்கு பாப்பான்குளத்தைச் சேர்ந்த கருப்பனின் மனைவி கருப்பி (70). இவர் கடந்த 10ம் தேதி கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் அருகே மெயின் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது மூவருடன் வந்த பைக், இவரது மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த மூதாட்டியை அருகில் இருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.