Thursday, May 16, 2024
Home » பைக் மீது வேன் மோதி வாலிபர் பலி

பைக் மீது வேன் மோதி வாலிபர் பலி

by Karthik Yash

 

ஏரல், ஏப். 25: வைகுண்டம் அருகே உள்ள பேட்மாநகரம் மூலக்கரை மேலூர் கீழத் தெருவைச் சேர்ந்த ராஜா மகன் லட்சுமணபெருமாள் (25), டிரைவர். திருமணமாகவில்லை. கடந்த 22ம் தேதி இரவு 10 மணிக்கு வேலை முடிந்து காரை ‘ஷெட்டில்’ விட்டு விட்டு, வீட்டுக்கு செல்வதற்காக தூத்துக்குடியில் இருந்து பைக்கில் புறப்பட்டார். வாகைக்குளம் – வைகுண்டம் ரோட்டில் மீனாட்சிபட்டி அருகே கொல்லாங்கொட்டை உடைக்கும் கம்பெனியை அடுத்து பைக் வந்த போது, எதிரே வந்த வேன், பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் லட்சுமணபெருமாளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து ராஜா, சாயர்புரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா வழக்கு பதிந்து தப்பியோடிய வேன் டிரைவரை தேடி வருகிறார்.

You may also like

Leave a Comment

five × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi