நெல்லை, ஜன. 13: தென்காசியை சேர்ந்தவர் சுபகான் மகன் முகம்மது ஆசிஷ்கான்(21). ஆலங்குளம் அருகேயுள்ள கரும்புலியூத்தை சேர்ந்தவர் பிரபாகரன் மகன் பரதன்(21). இவர்கள் இருவரும் சீதபற்பநல்லூரில் உள்ள கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகின்றனர். நேற்று காலை ஒரே பைக்கில் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர். புதூர் விலக்கு ரோடு பகுதியில் வரும்போது எதிரே புதூரை சேர்ந்த தங்கையா மகன் செல்லத்துரை(25) என்பவர் ஓட்டி வந்த பைக்குடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆசிஷ்கான் மற்றும் பரதன் இருவரும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள், இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பைக்குகள் மோதல் 2 மாணவர்கள் படுகாயம்
previous post