நெல்லை, ஜன. 13: நாங்குநேரி அருகே விவசாயி வீட்டில் ரூ.60 ஆயிரம் பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாங்குநேரி அருகே உள்ள வாகைக்குளத்தை சேர்ந்தவர் சுப்பையா (57). விவசாயி. இவர் தனது வீட்டின் அருகே புதிதாக மற்ெறாரு வீடு கட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு புதிதாக கட்டியுள்ள வீட்டில் தங்கியுள்ளார். ேநற்று காலையில் வந்து பார்த்தபோது பழைய வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த சுப்பையா உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.60 ஆயிரம் மற்றும் சில பொருட்கள் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்த தகவலறிந்த நாங்குநேரி எஸ்ஐகள் தீபா, ஐசக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி பணம் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.