கோவை, ஜூலை 26: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜகுமாரி (53). இவர் கோவை அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் ரேஸ்கோர்சில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு இவர் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது தாமஸ் பார்க் அருகே சென்றபோது பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க நகை பறித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ராஜகுமாரி சத்தம் போட்டார். ஆனால், அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து ராஜகுமாரி ரேஸ்கோர்ஸ் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.