சென்னை: பேராசிரியர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கவியரங்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் இனமானப் பேராசிரியரின் நூற்றாண்டு நிறைவு விழா சிறப்பு கவியரங்கம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இனமானம் காத்த தமிழ்வானம் என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து தலைமையில் இந்த கவியரங்கம் நடைபெற்றது. இதில், கவிஞர்கள் கபிலன், விவேகா, ஆண்டாள் பிரியதர்ஷினி, நெல்லை ஜெயந்தா ஆகியார் கலந்து கொண்டு உரையாற்றினர். முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கவியரங்கத்தை பார்வையிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு, சேகர்பாபு, செந்தில் பாலாஜி, மத்திய சென்னை நாடாளமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், பேராசிரியரின் மகன் அன்பு செல்வன், பேரனும் எம்எல்ஏவுமான வெற்றியழகன், திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே..எஸ்.இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்….