பொன்னமராவதி, மார்ச் 15: பொன்னமராவதி அருகே அரசு பேரூந்து மோதி படுகாயம் அடைந்தார். பொன்னமராவதி அருகே உள்ள நாத்துப்பட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி செல்வி(38). இவர் நேற்று தனது தோட்டத்தில் விளைந்த காய்களை பொன்னமராவதி சந்தைக்கு தனது மொபட்டில் கொண்டு சென்றார். பின்னர் அங்கிருந்த கொப்பனாபட்டி சாலை வழியாக வீடு திரும்பினார்.
வௌ்ளையாண்டிபட்டி விளக்கு அருகில் சென்றபோது, எதிரே வந்த அரசு பஸ் மொபட் மீது மோதியது. இதில் செல்வி படுகாயம் அடைந்தார். அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு பொன்னமராவதி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.