காரைக்குடி, டிச.25: காரைக்குடியில் பெரியார் நினைவுநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, திக உள்பட பல்வேறு கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார்.
மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கேஎஸ்.ரவி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணைத்தலைவர் காரை சுரேஷ், நகர அவைத்தலைவர் சன்சுப்பையா, நகர்மன்ற உறுப்பினர்கள் ஹேமலதா, கார்த்தி, திமுக நிர்வாகி பொறியாளர் சேதுராமன், புதுவயல் சுப்பிரமணி, நகர துணைச் செயலாளர் லட்சுமி, இளைஞரணி தெற்குதெரு கார்த்தி, ஜெபதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏ மாங்குடி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகர தலைவர் பாண்டிமெய்யப்பன், நகர செயலாளர் குமரேசன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் சண்முகதாஸ், தட்சிணா மூர்த்தி, பழனியப்பன், ஜெயபிரகாஷ், மாஸ்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.க சார்பில் மாவட்ட காப்பாளர் சாமி திராவிடமணி, தலைமை கழக பேச்சாளர் பிராட்லா உள்பட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர். மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் பசும்பொன் மனோகரன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாநில சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் சிற்பி சேது தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.