இளையான்குடி, டிச.25: இளையான்குடி பகுதியில் கடந்த சில வாரங்களாக காய்ச்சல் தீவிரமாக பரவியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிப்புக்குள்ளான நிலையில், பரிசோதனையில் வைரஸ், டைபாய்டு மற்றும் டெங்கு காய்ச்சல் என உறுதியானது. பாதிக்கப்பட்ட நபர்கள் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட இடங்களில் மேலும் பரவாமல் இருக்க, சுகாதாரத்துறை சார்பில் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடக்கு சாலைக்கிராமம், சாலைக்கிராமம், குயவர்பாளையம் ஆகிய பகுதிகளில் சுகாதார ஆய்வாளர் ஹரிகரன் தலைமையில் கொசு மருந்து மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.