Saturday, May 18, 2024
Home » பெரம்பலூர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

by Mahaprabhu

பெரம்பலூர்,டிச.16: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாகத் தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்த பட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொது பயன்பாட்டிற்கான கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.

தற்போது தொழில்முனைவோரின் கோரிக்கையைத் தொடர்ந்து, தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில் ஜவுளி தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டிடங்களையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைத்து நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெருகும். மேலும், அதிகளவில் அந் நிய செலாவணி ஈட்டுவத ற்கு வாய்ப்புகள் ஏற்படும். எனவே, சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் வேலைவாய்ப்புகளை பெருக்கவும் அனைத்து தொழில் முனைவோரும் முன்வர வேண்டும்.

மேற்காண் பொருள் தொடர்பாக ஆலோசிக்கும் பொருட்டு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 30ம்தேதி அன்று பிற்பகல் 4.30 மணியளவில் நடைபெறவிருந்த கூட்டம் நிர்வாக காரணத்தை முன்னிட்டு வருகிற 20ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறும். கூடுதல் விவரங்களுக்கு மண்டல துணை இயக்குநர், மண்டல துணை இயக்குநர் அலுவலகம், துணிநூல் துறை, எண். 30/3, நவலடியான் வளாகம் முதல் தளம், தான்தோன்றி மலை, கரூர்- 639 005 (தொலைபேசி எண்: 04324- 299544, 98432 12584) என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

7 + 20 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi