பெரம்பலூர்: பெரம்பலூர் புது பஸ்டாண்டு நுழைவு வாயிலில் பகுதியில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.ளும், கடந்த 2017ம் ஆண்டு அதன் நடுவே ஜெயலலிதா சிலையும் அமைக்கப்பட்டது. இதில் 6 அடி உயரமுள்ள பெரியார் சிலையின் இடது கை கட்டைவிரல் உடைந்து கிடந்தது. இதுகுறித்து அதிமுக மற்றும் திராவிட கட்சிகளுக்கு தெயவந்ததால் பெரம்பலூர் காவல் நிலையத்தில் அதிமுக முன்னாள் அரசு வழக்கறிஞர் கணேசன் மூலம், புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சிலையை சுற்றியிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வந்தனர்.
இதில், குன்னம் தாலுக்கா, ஒகளூர் கிராமம், காமராஜர் நகர் அனுச்சந்திரன்(32) பெரியார் சிலையை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். அவர் போதையில் சிலை அருகில் படுத்திருந்த போது அனுச்சந்திரன் பெரியார் சிலையின் கையை பிடித்து எழுந்த போது, கட்டைவிரல் சேதமானது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பெரம்பலூர் போலீசார் அனுச்சந்திரன் மீது வழக்குப்பதிந்து அவரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.