திருப்பூர், ஏப். 7: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன்.(31) இவரது மனைவி கவிதா(27), இவர்கள் குடும்பத்துடன் பழவஞ்சிபாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பாண்டியன் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்ற பின், மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டிலிருந்துள்ளனர். அப்போது பைக்கில் வந்த 2 பேர் கவிதாவிடம் முகவரி கேட்டுள்ளனர்.
கவிதா முகவரி தெரியாது எனக் கூறவே திடீரென இரண்டு பேரும் வீட்டிற்குள் புகுந்து கவிதாவை மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.