திருச்சி: திருச்சி கே.கே.நகர் அன்பில்நகர் விரிவாக்கத்தைச் சேர்ந்தவர் சரோஜினிதேவி (49). இவர் கடந்த 12ம் தேதி அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு நடந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சரோஜினிதேவி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றனர். இதில் சுதாரித்த அவர் செயினை இறுக பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார். இதனால் மர்ம நபர்கள் தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்து சரோஜினிதேவி ஏர்போர்ட் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.