திருச்செங்கோடு: வையப்பமலை கவிதாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மகளிர் மேம்பாட்டு மையம் சார்பாக, பெண்களுக்கான தூய்மைப்பணி மற்றும் தன் தூய்மை பேணுதல் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி தாளாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். முதல்வர் விஜயகுமார், தலைவர் பழனியப்பன், துணைத்தலைவர் சரஸ்வதி அம்மாள் மற்றும் செயலாளர் கவிதா செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக வையப்பமலை அரசு மருத்துவமனை டாக்டர் ஆஷாதேவி கலந்து கொண்டு பேசுகையில், ‘பெண்கள் தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் மன உறுதி உள்ளவர்களாக வாழவேண்டும். குடும்பத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல, பெற்றோரோடு சேர்ந்து பாடுபட வேண்டும். சுய ஒழுக்கம், சுய தூய்மை போன்றவற்றை பின்பற்றுவதோடு, உடன் பயிலும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்ப
பெண்களுக்கான தூய்மை பணி விழிப்புணர்வு கருத்தரங்கம்
previous post