இடைப்பாடி : பூலாம்பட்டியில் உள்ள திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளான பூலாம்பட்டி, குப்பனூர், காசிக்காடு, பில்லுக்குறிச்சி, சர்வரெட்டியூர், நாவீதன்குட்டை, மூலப்பாறை, காட்டுவளவு, நெடுங்குளம், கோனேரிப்பட்டி உள்ளிட்ட இடங்களிலிருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர். சேலம் மற்றும் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களிலிருந்து கொள்முதலுக்காக வியாபாரிகள் வந்து குவிந்தனர். மொத்தம் 725 மூட்டை பருத்தி ₹25 லட்சத்திற்கு ஏலம் போனது. பிடி ரகம் குவிண்டால் ₹7699 முதல் ₹9349 வரையிலும் விற்பனையானது. கோனேரிப்பட்டி வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 20ம் தேதி(நாளை) பருத்தி ஏலம் நடைபெறும் என கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்….