திருக்காட்டுப்பள்ளி, மே 25: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானார்.பூதலூர் என்வி நகரை சேர்ந்த திருப்பதி மகன் பிரதாப் (28). இவர் திங்கள்கிழமை இரவு தன் மனைவி ரோஜா மற்றும் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பூதலூரிலிருந்து செங்கிப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். வில்வராயன்பட்டி கோழி பண்ணை எதிரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்த பிரதாப் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை உயிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி ரோஜா, பூதலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.