ராமநாதபுரம்,ஜன.1: புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக எஸ்.பி.தங்கத்துரை தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி தங்கத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இரண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பைக் ரேஸ் மற்றும் பொதுமக்கள், பொது சொத்துகளுக்கு இடையூறு, சேதம் விளைவித்தல் உள்ளிட்ட இதர குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க 38 இடங்களில் காவல் துறையினர் மாவட்டத்தில் வாகன சோதனை ஈடுபட உள்ளனர். மேலும், விதிகளை மீறி பைக் ரேஸில் ஈடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.