Saturday, May 18, 2024
Home » புதுவை வந்தார் அமித்ஷா; அரவிந்தர் 150வது நூற்றாண்டு விழாவில் பங்கேற்பு: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

புதுவை வந்தார் அமித்ஷா; அரவிந்தர் 150வது நூற்றாண்டு விழாவில் பங்கேற்பு: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

by kannappan

புதுச்சேரி: அரசு முறை பயணமாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை புதுச்சேரி வந்தார். காலை 10 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் லாஸ்பேட்டை விமானம் நிலையம் வந்த அவரை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி மற்றும் சபாநாயகர், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், அரசியல் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து 10.20 மணிக்கு கார் மூலம் புறப்பட்டு ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்துக்கு சென்று, அங்குள்ள பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்தார். 10.40 மணிக்கு அரவிந்தர் ஆசிரம் சென்று அரவிந்தர், அன்னை சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்து புறப்பட்டு காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்தில் நடந்த அரவிந்தரின் 150வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார். பின்னர் மதியம் 12.40 மணியளவில் கவர்னர் மாளிகைக்கு வந்து மதிய உணவருந்தினார். இதை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினர். பின்னர் மதியம் 1.55 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு 2 மணிக்கு கம்பன் கலையரங்கத்தில் நடக்கவுள்ள அரசு விழாவில் கலந்துகொண்டார். அப்போது இசிஆரில் ரூ.70 கோடியில் புதிய பஸ் நிலையம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் குமரகுருபள்ளத்தில் ரூ.45 கோடியில் 13 அடுக்குமாடி குடியிருப்பு, விழுப்புரம் – புதுச்சேரி நெடுஞ்சாலையை ரூ.30 கோடியில் அகலப்படுத்துதல் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சி முடிந்ததும் கம்பன் கலையரங்கில் இருந்து புறப்படும் அமித்ஷா 3.45 மணிக்கு சித்தானந்தா நகரிலுள்ள பாஜக அலுவலகம் செல்கிறார். அங்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். 5.05 மணியளவில் அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு கார் மூலம் விமான நிலையம் வந்தடையும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக சென்னை சென்று விமானத்தில் டெல்லி செல்கிறார். அமித்ஷாவின் வருகையையொட்டி புதுச்சேரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன….

You may also like

Leave a Comment

fifteen − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi