புதுச்சேரி: புதுவையில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் 10ம்தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன. மேலும் 10 முதல் கல்லூரிகள் வரை 18ம்தேதி மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியதையடுத்து பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்க அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி புதுவையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று (4ம்தேதி) முதல் திறக்கப்பட உள்ளன. வாரத்தில் 6 நாட்களும் பள்ளிகள் முழுமையாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது….