புதுடெல்லி: பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லி சாணக்கியாபுரி தமிழ்நாடு வைகை இல்லத்தில் இருக்கும் அவரது திருவுருவச் சிலைக்கு திமுக எம்பிக்கள் அனைவரும் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள். இதில் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், தமிழச்சி தங்க பாண்டியன், கனிமொழி, வில்சன், ஆ.ராசா , திருச்சி சிவா ஆகியோர் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.இதைத் தொடர்ந்து அண்ணாவின் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பிறகு திமுக எம்ப்பிக்கள் அனைவரும் அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயத்தை உருவாக்குவோம், இந்தி மொழி திணிப்பை எதிர்ப்போம் என முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் அறிஞர் அண்ணாவின் சிலைக்கும் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட பல்வேறு தமிழக கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்….
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அண்ணா சிலைக்கு தி.மு.க எம்பிக்கள் அஞ்சலி
previous post