Saturday, May 18, 2024
Home » புதுமாப்பிள்ளையை கைது செய்ய பேலீசார் தீவிரம்

புதுமாப்பிள்ளையை கைது செய்ய பேலீசார் தீவிரம்

by MuthuKumar

சேலம், மார்ச் 6: சேலம் அருகே காதல் மனைவியின் நிர்வாண போட்டோவை நண்பர்களுக்கு அனுப்பிய புதுமாப்பிள்ளையை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஏற்காடு செந்திட்டு பகுதியை சேர்ந்தவர் செந்தில் (23). இவரும் காரிப்பட்டி பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். கடந்த மாதம் வீட்டிலிருந்து வெளியேறிய இளம்பெண், செந்திலை திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஏற்காட்டிற்கு சென்று காதல் கணவனுடன் குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 3ம் தேதியன்று தனது பெற்றோரை தொடர்பு கொண்ட இளம்பெண், தான் குப்பனூரில் இருப்பதாக தெரிவித்தார்.

இதனையடுத்து பெற்றோர் அங்கு சென்று விசாரித்தபோது, கணவனிடம் இருந்து வீட்டிற்கு தெரியாமல் தப்பி வந்ததாக கூறினார். மேலும், தனது காதல் கணவரான செந்தில், தன்னை நிர்வாணப்படுத்தி செல்போனில் போட்டோ எடுத்து அதனை அவரின் நண்பர்களுக்கு அனுப்பி வைத்ததாகவும், இதனால் அதிர்ச்சியடைந்து செந்திலுக்கு தெரியாமல் அங்கிருந்து தப்பி வந்ததாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து காரிப்பட்டி போலீசில் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், இளம்பெண் வீட்டைவிட்டு வெளியேறிய தகவல் அறிந்த செந்தில் தலைமறைவானது தெரியவந்தது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மூலமாக செந்திலை பிடிக்க தீவிரமாக ேதடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

3 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi