புதுக்கோட்டை: புதுக்கோட்டை வேதநாயகி அம்பிகை உடனுறை சாந்தநாத சுவாமி கோயிலில் ஆனி திருமஞ்சனம் விழா நடைபெற்றது. ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு ஆலயத்தின் அலங்கார மண்டபத்தில் உற்சவர் நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு பால், திருமஞ்சனம், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. உற்சவர் நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு அலங்காரம் நடைபெற்று பன்முக தீபாராதனை, சோடஷ தீபாராதனை, பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது. ஆலயத்தில் வேதநாயகி அம்பிகை சாந்தநாதசுவாமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர் இவ்விழாவில் உபயதாரர் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் குருக்கள் செய்தனர் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.