புதுக்கோட்டை,மார்ச் 27: மளிகை பொருட்கள் வாங்குவதற்காக உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.60 ஆயிரத்தை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் வாகவாசல் ஆர்ச் அருகே தேர்தல் பறக்கும் படை கூடுதல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக புதுக்கோட்டை மாவட்டம் குண்டாண்டார் கோயில் நான்கு ரோடு பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவர் ஓமினி வாகனத்தில் மளிகை பொருள் வாங்குவதற்காக உரிய ஆவணங்கள் இன்றி ரூ.60 ஆயிரம் எடுத்து சென்றார். அந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை குழுவினர் அதனை புதுக்கோட்டை ஆர்டிஓ ஐஸ்வர்யாவிடம் ஒப்படைத்தனர்.