Sunday, April 28, 2024
Home » இரு சக்கர வாகனம் மோதி பெண் பலி

இரு சக்கர வாகனம் மோதி பெண் பலி

by Ranjith

 

புதுக்கோட்டை, மார்ச் 27: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அய்யனார் நகரைச் சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி பழனியம்மாள் (24). இவர், கீரனூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது, வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பிரிவு அருகே களமாவூர் கணக்கோண்பட்டியை சேர்ந்த பழனிமுத்து (33) என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பழனியம்மாள் மீது மோதியுள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த பழனியம்மாளை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம், கீரனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பழனியம்மாள் உயிரிழந்தார். மேலும் முகத்தில் காயங்களுடன் பழனிமுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கீரனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

fifteen + 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi