புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட அளவில் நடந்த மன்றப்போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா வழங்கினார். புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் மாவட்ட அளவிலான மன்றப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் தேர்வு செய்யப்பட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மஞ்சுளா கலந்துகொண்டு தலைமை தாங்கினார். பின்னர் அரசுப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் மாவட்ட அளவில் இலக்கிய மன்றப்போட்டியில் பேச்சு, கட்டுரை, கவிதை ஆகிய தலைப்பிலும், வினாடி, வினாப்போட்டி தலைப்பிலும், சிறார் திரைப்படத்தில் திரை விமர்சனம், தனிநபர் நடிப்பு, குறும்படம் தயாரித்தல் ஆகிய தலைப்புகளிலும், வானவில் மன்றப்போட்டியில் அறிவியல் கண்காட்சி, அறிவியல் செயல் திட்டம், அறிவியல் நாடகம் ஆகிய தலைப்பிலும் ஒவ்வொரு தலைப்பிலும் முதல் மூன்று இடங்களில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கி பாராட்டினார். அப்போது சிறப்பான வாய்ப்பினை வழங்கிய தமிழக முதலமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், கல்வித்துறை உயர் அலுவலர்கள் மற்றும் தமிழக அரசுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.
புதுகை மாவட்ட அளவில் நடந்த மன்றப்போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
previous post