விருதுநகர், டிச. 3: விருதுநகர் மாவட்ட நூலகம் அருகில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம் தலைமையில் இணை ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் முன்னிலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிப்படி சிபிஎஸ் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். சிபிஎஸ் திட்டத்தில் ஓய்வு பெற்ற, இறந்த, ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வலியுறுத்தி குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் வைரவன், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி, அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் ராஜகோபால், பொன்ராஜ், நாகப்பன், விக்னேஷ், மாரியப்பன், உலகநாதன், சிவஞானம், உமாராணி உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினர்.