வேலூர், மார்ச் 12: வேலூர் மாவட்டத்தில் வேதியியல், கணக்குபதிவியல், நிலவியல் பாடங்களுக்கான பிளஸ்2 பொதுத்தேர்வில் 350 பேர் ஆப்சென்ட் ஆகினர். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்களின் தேர்வு நிறைவு பெற்று முக்கிய பாடப்பிரிவுகளுக்கான தேர்வு நடந்து வருகிறது. அதன்படி நேற்று, வேதியியல், கணக்குப்பதிவியல், நிலவியல் தேர்வு நடந்தது. இந்த தேர்வு வேலூர் மாவட்டத்தில் 80 மையங்களில் நடந்தது. இதற்காக 13 ஆயிரத்து 968 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் நேற்று நடந்த வேதியியல், கணக்கு பதிவியல், நிலவியல் தேர்வை 13 ஆயிரத்து 588 பேர் எழுதினர். தேர்வுக்கு 380 பேர் ஆப்சென்ட் ஆகி இருந்தனர். தேர்வு முறைகேட்டிலும் யாரும் ஈடுபடவில்லை என தேர்வுத்துறை அதிகாரிகள் ெதரிவித்தனர்.