செய்யாறு: செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது பிளஸ் 2 மாணவி. வீட்டில் இருந்த இவர் நேற்று முன்தினம் திடீரென மாயமானார். அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்தை தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் எஸ்ஐ அஜீத்குமார் வழக்குப்பதிவு செய்து மாணவியை யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி தேடி வருகிறார்.