Thursday, May 16, 2024
Home » பிச்சை எடுக்கும் பெற்றோரின் இரண்டரை வயது குழந்தை பாலியல் பலாத்கார கொலை: நிர்வாண நிலையில் உடல் ரயில் தண்டவாளத்தில் வீச்சு

பிச்சை எடுக்கும் பெற்றோரின் இரண்டரை வயது குழந்தை பாலியல் பலாத்கார கொலை: நிர்வாண நிலையில் உடல் ரயில் தண்டவாளத்தில் வீச்சு

by kannappan

காஜியாபாத்: உத்தரபிரதேசத்தில் பிச்சை எடுக்கும் பெற்றோரின் இரண்டரை வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று, ரயில் தண்டவாளத்தில் வீசிச் சென்ற கும்பலை போலீசார் ேதடி வருகின்றனர். தலைநகர் டெல்லியின் ஆனந்த் விஹார் பகுதியை சேர்ந்த பெற்றோர், கடந்த சில  நாட்களுக்கு முன் உத்தரபிரதேச மாநிலம் கவுசாம்பி பேருந்து நிலையத்திற்கு வந்தனர். பிச்சை  எடுப்பவர்களான அவர்கள், தங்களது இரண்டரை வயது பெண் குழந்தையை அப்பகுதியில்  விளையாட விட்டனர். திடீரென அந்த குழந்தை மாயமானது. அதிர்ச்சியடைந்த  ெபற்றோர், தங்களது மகள் மாயமானது குறித்து போலீசில் புகார்  அளித்திருந்தனர். அதையடுத்து அந்த குழந்தையை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் காஜியாபாத் பகுதியின் ரிங் ரோட்டின் ரயில்வே தண்டவாளத்தில் நிர்வாண நிலையில் குழந்தையின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த குழந்தையின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மருத்துவ பரிசோதனையில் அந்த குழந்தை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த போலீசார், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி வந்தனர். அப்பகுதியில் உள்ளி சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதற்கிடையே கவுசாம்பி பேருந்து நிலையத்தில் மாயமான பிச்சைக்கார பெற்றோரின் இரண்டரை வயது குழந்தைதான், இந்த குழந்தை என்பதை உறுதி செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக 5 பேரை பிடித்து காவலில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் எஸ்பி ஞானேந்திர சிங் கூறுகையில், ‘ரயில்வே தண்டவாளத்தில் இரண்டரை வயது குழந்தை இறந்து கிடப்பதாக தகவல் அளித்த முகமது நவுஷாத் உட்பட 5 பேரிடம் விசாரித்து வருகிறோம். நவுஷாத் அளித்த புகாரின் அடிப்படையில், அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மீது ஐபிசி பிரிவு 376 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்….

You may also like

Leave a Comment

16 + seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi