நெல்லை,ஏப்17: நெல்லை அருகே 12 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய முதியவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். பாளை அருகேயுள்ள கீழநத்தம் வடக்கூர் பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேல்(62). இவர் நேற்று முன் தினம் தனது நண்பர் ஒருவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு நண்பரின் 12 வயது மகள் இருந்துள்ளார். அப்போது சிங்காரவேல் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதனால் அந்த சிறுமி சப்தம்போட்டு கதறி அழுதுள்ளார். இதனையடுத்து சிங்காரவேல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். பின்னர் இது குறித்து தெரியவந்த அச்சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் நெல்லை புறநகர் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் மாரியம்மாள், முதியவர் சிங்காரவேல் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
பாளை அருகே முதியவர் மீது போக்சோ வழக்கு
previous post