பல்லடம், மார்ச் 12: பல்லடம் நகராட்சியில் ரூ.1 கோடியே 35 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்கப்பட்டுள்ளது. பல்லடம் நகராட்சி 3வது வார்டு குறிஞ்சி நகர், 10 வது வார்டு சூரியா லே அவுட், சாக்குகாரர் வீதி, மருத்தப்ப காலனி, 9வது வார்டு பட்டேல் வீதி, ஜெயப்பிரகாஷ் வீதி, 11வது வார்டு திருவள்ளுவர் வீதி,
தர்கா வீதி மற்றும் சங்கரநாராயணராவ் வீதி உள்ளிட்ட பகுதிகளில் தார் சாலை மற்றும் மழை நீர் வடிகால் பராமரித்தல் மற்றும் குடிநீர் பகிர்மான குழாய் அமைத்தல் ஆகிய பணிகள் ரூ.1 கோடியே 35 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் மேற்கொள்ள பூமி பூஜை நடத்தி திட்டப்பணிகளை நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் நகர திமுக செயலாளர் ராஜேந்திரகுமார், நகராட்சி பொறியாளர் சுகுமாறான், பணி மேற்பார்வையாளர் ராசுக்குட்டி, நகராட்சி கவுன்சிலர்கள் தினேஷ்குமார், வசந்தாமணி தங்கவேல், சபீனா ஜாகீர்உசேன், பபிதா கயாஸ் அகமது, நகர திமுக நிர்வாகிகள் நடராஜன், வேலுமணி, சுப்பிரமணியம், குட்டி பழனிசாமி, மாவட்ட பிரதிநிதி கவுஸ்பாட்ஷா, ஐ.டி. அணி தொகுதி அமைப்பாளர் சேக் மக்தூம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.