உடுமலை, மே 6: பாலப்பம்பட்டி துணை மின்நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளையொட்டி இன்று (6-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்விநியோகம் தடைபடும் இடங்கள்:உடுமலை காந்திநகர், அண்ணாகுடியிருப்பு, காந்திசவுக், குட்டை திடல், நேரு வீதி, நகராட்சி அலுவலகம், பார்க், ரயில் நிலையம், போலீஸ் குடியிருப்பு, தளி ரோடு, சந்தை, எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கண்ணமநாயக்கனூர், குரல்குட்டை, மடத்தூர், மலையாண்டிபட்டணம், மருள்பட்டி, உரல்பட்டி, சாளரபட்டி, பாப்பான்குளம்,சாமராயபட்டி, பெருமாள்புதூர், குமரலிங்கம், கொழுமம், ருத்திராபாளைய்ம, வீரசோழபுரம்.