குமரி: பாம்பன் பாலம் பராமரிப்பு பணி காரணமாக ராமேஸ்வரம் – மண்டபம் இடையே ரயில்கள் செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட இருந்த திருப்பதி சிறப்பு ரயில் மண்டபத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்படும். ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை சிறப்பு ரயில் மண்டபத்திலிருந்து இரவு 8:52க்கு புறப்படும். மாலை 5:45க்கு சென்னையில் இருந்து புறப்படும் ராமேஸ்வரம் சிறப்பு ரயில் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படும். இரவு 7:15க்கு சென்னையில் இருந்து புறப்படும் ராமேஸ்வரம் சிறப்பு ரயில் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படும். குஜராத் மாநிலம் ஓக்ஹாவிலிருந்து 29ம் தேதி புறப்பட்ட ரயிலும் மண்டபத்துடன் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது….