அந்தியூர்,ஆக.29: அந்தியூர் அடுத்துள்ள அடர்ந்த மலைப்பகுதி கொளத்தூர் கத்திரிப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன்(35).லாரி டிரைவர் இவர் நேற்று மாலை அந்தியூரில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக பைக்கில் வந்துவிட்டு வீடு நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தார். வெள்ளித் திருப்பூர்- கொளத்தூர் ரோட்டில் சந்தைப்பேட்டை அருகே செல்லும் பொழுது எதிரே வந்த பவானி நோக்கி சென்ற தனியார் பஸ் மீது பைக் மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே லட்சுமணன் பலியானார். இவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வெள்ளித்திருப்பூர் போலீசார் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து போன லட்சுமணனுக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். லட்சுமணன் தலைக்கவசம் அணியாமல் வந்ததால் தலையில் பலத்த அடிபட்டு உயிரிழந்தது இருசக்கர வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.